2005/07/31

திருப்பதி செல்ல எளிதாய் ஒரு வழி

நம்மில் பலருக்கும் திருப்பதி செல்வது என்றால் முதலில் நினைவுக்கு வருவது நீண்ட வரிசைகளும், ராமானந்த் சாகரின் ராமாயணம் ஓடும் கூண்டுகளும் தான். 10/15 மணி நேரம் இந்த கூண்டில் மாட்டிய அனுபவம் எங்கள் குடும்பத்திற்க்கு உண்டு. இப்பொழுது அதனை குறைக்க M.G.M மாதிரி கைப்பட்டை கொண்டு வந்தாலும், கூண்டில் இருக்கும் நேரம் தான் குறைந்து இருக்கிறது. மற்ற எல்லாம் அப்படியே தான். உ.ம் தேவஸ்தானம் தரும் பயணியர் விடுதி கூட்டம், வரிசை எல்லாம் அப்படியே தான் இருக்கிறது.

இந்த முறை , சென்னையில் இருக்கும் ஆந்திர சுற்றுலாத் துறையின் திருத்தல உலாவில் போனோம். சென்னையில் மாலை 6.30 க்கு கிளம்பி, A/c volvo பேருந்தில், கீழ் திருப்பதிக்கு 10.30 க்கு கொண்டு போய்விட்டார்கள். அங்கே நம் அறை சாவியோடு ஒரு ஆள் நிற்கிறார். (இருவருக்கு ஒரு அறை). காலை 3 மணிக்கு கிளம்பி மலை மேல் ஏறினால், போன உடன் ticket உடன் ஒரு ஆள் நிற்கிறார், நம் செருப்பு, cell phone வாங்க ஒரு ஆள் இருக்கிறார். அர்ச்சனா அனந்தர தரிசனத்திற்க்கு(200 ரூ) கூட்டி போகிறார்கள். 7 மணிக்கு தரிசனம் முடிந்து, லட்டு வாங்கி மீண்டும் கீழ் திருப்பதி நோக்கி பயணம். அதிக லட்டுக்கள் வேண்டுமானால் அதற்க்கும் ஏற்பாடு செய்கிறார்கள். மொட்டை அடிக்க வேண்டுமா அதற்கும் இந்த நேரத்திற்க்குள்ளே முடிக்க சரியாய் ஆட்கள் இருக்கிறார்கள். மாலைக்குள் கீழ் திருப்பதி அம்மனையும், காளஹஸ்தியும் பார்க்க அழைத்துச் சென்று 4 மணிக்கு சென்னைக்கே கூட்டி வந்து விட்டு விடுகிறார்கள்.

ஒரு நாளில் இவையனைத்தும், மிக நீண்ட வரிசைகளில் நிற்காமல், போய் வந்ததைப் பார்த்த பொழுது, அதற்காய் கொடுத்த 1000 ரூ உபயோகமாகவே பட்டது.

யாரேனும் போக நினைத்தால், இந்த ஆந்திர சுற்றுலாத் துறையின் அலுவலகம் தி.நகரில் பெருமாள் கோவில் அருகிலேயே இருக்கிறது. Swarnanthra travels என்று பெயர் போட்டு இருப்பார்கள்.

No comments: