2005/07/29

தமிழக பொறியியல் கல்லூரிகள் - 3

இதை படிங்க முதல்ல. சிரிப்பு சிரிப்பா வரலை ? பாதி கல்லூரிகளில் பாடம் நடத்த நல்ல ஆள் இல்லை, இருக்கறவங்கள்ள பாதிக்கு பாடம் வேற தெரியாது, இதுல பசங்க என்ன போட்டுட்டு வரங்கன்னு பார்த்து, அது சரியா இல்லைனா fine போட்டு, வகுப்பை விட்டு வெளியே அனுப்பி, பாடத்தை தவிற எல்லாம் நடக்கும் போல இருக்கு. Moral Science பாடம் வைக்காமல் இருந்தால் சரி. Moral guardian வேலை கல்லூரிகளுக்கு எதற்கு என்று தெரியவில்லை. அப்பா, அம்மா பார்த்து கொள்ள மாட்டார்களா ? 18 வயதில் (விவரம் தெரிந்த) அப்பா அம்மாக்கள் எல்லோருமே பிள்ளைகளுக்கு விவரம் தெரியும் என்று விடும் போது நம் கல்லூரிகளுக்கு திடீர் என்று அக்கறை. நான் பார்த்த வரை இதனை Selling point ஆக உபயோகிக்கிறார்கள். அதற்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. இதை செய்ய 500 பக்க புத்தகத்தை படிக்க வேண்டாம். எனவே அமல் படுத்துவதும் சுலபம். எனவே செய்கிறார்கள்.

Shorts, T-shirt, jeans இவை எல்லாம் போட்டால் என்ன ? படிப்பு மண்டையில் ஏறாதா ? நான் படித்த போது வேஷ்டி கட்டி வருவது சகஜம். என்ன கெட்டுப் போய்விட்டோம் என்று தெரியவில்லை.

அப்படியே இதையும் படித்துவிடுங்கள். நான் இங்கே சொன்னதை மார்தட்டி பெருமையாய் சொல்கிறார்கள். கம்பனிக்கள் கேட்பதை சொல்லிக் கொடுக்கிறோம் என்று. Computer science, Computer engineering எல்லாம் தேவை இல்லை இவர்களுக்கு. science/engineering எல்லாம் சும்மா, programming போதும். தேவுடா ! தேவுடா !

1 comment:

Anonymous said...

I have read all your post related to this topic.

We can't blame anyone.If people who have studied here in india is moving to abroad, how can we expect change in the system and good teachers at colleges.