2005/07/31

திருப்பதி செல்ல எளிதாய் ஒரு வழி

நம்மில் பலருக்கும் திருப்பதி செல்வது என்றால் முதலில் நினைவுக்கு வருவது நீண்ட வரிசைகளும், ராமானந்த் சாகரின் ராமாயணம் ஓடும் கூண்டுகளும் தான். 10/15 மணி நேரம் இந்த கூண்டில் மாட்டிய அனுபவம் எங்கள் குடும்பத்திற்க்கு உண்டு. இப்பொழுது அதனை குறைக்க M.G.M மாதிரி கைப்பட்டை கொண்டு வந்தாலும், கூண்டில் இருக்கும் நேரம் தான் குறைந்து இருக்கிறது. மற்ற எல்லாம் அப்படியே தான். உ.ம் தேவஸ்தானம் தரும் பயணியர் விடுதி கூட்டம், வரிசை எல்லாம் அப்படியே தான் இருக்கிறது.

இந்த முறை , சென்னையில் இருக்கும் ஆந்திர சுற்றுலாத் துறையின் திருத்தல உலாவில் போனோம். சென்னையில் மாலை 6.30 க்கு கிளம்பி, A/c volvo பேருந்தில், கீழ் திருப்பதிக்கு 10.30 க்கு கொண்டு போய்விட்டார்கள். அங்கே நம் அறை சாவியோடு ஒரு ஆள் நிற்கிறார். (இருவருக்கு ஒரு அறை). காலை 3 மணிக்கு கிளம்பி மலை மேல் ஏறினால், போன உடன் ticket உடன் ஒரு ஆள் நிற்கிறார், நம் செருப்பு, cell phone வாங்க ஒரு ஆள் இருக்கிறார். அர்ச்சனா அனந்தர தரிசனத்திற்க்கு(200 ரூ) கூட்டி போகிறார்கள். 7 மணிக்கு தரிசனம் முடிந்து, லட்டு வாங்கி மீண்டும் கீழ் திருப்பதி நோக்கி பயணம். அதிக லட்டுக்கள் வேண்டுமானால் அதற்க்கும் ஏற்பாடு செய்கிறார்கள். மொட்டை அடிக்க வேண்டுமா அதற்கும் இந்த நேரத்திற்க்குள்ளே முடிக்க சரியாய் ஆட்கள் இருக்கிறார்கள். மாலைக்குள் கீழ் திருப்பதி அம்மனையும், காளஹஸ்தியும் பார்க்க அழைத்துச் சென்று 4 மணிக்கு சென்னைக்கே கூட்டி வந்து விட்டு விடுகிறார்கள்.

ஒரு நாளில் இவையனைத்தும், மிக நீண்ட வரிசைகளில் நிற்காமல், போய் வந்ததைப் பார்த்த பொழுது, அதற்காய் கொடுத்த 1000 ரூ உபயோகமாகவே பட்டது.

யாரேனும் போக நினைத்தால், இந்த ஆந்திர சுற்றுலாத் துறையின் அலுவலகம் தி.நகரில் பெருமாள் கோவில் அருகிலேயே இருக்கிறது. Swarnanthra travels என்று பெயர் போட்டு இருப்பார்கள்.

2005/07/29

சாலைகள்

The Hindu வின் தலையங்கத்தில் சாலைகள் பாதுகாப்பு பற்றி எழுதிவிட்டார்கள். தமிழகத்தில் இந்த முறை பார்த்த ஆச்சரியமான மாற்றம் இது. கோவை, பழனி, மதுரை இணைக்கும் சாலைகளில் 40/50 கி.மீக்கு ஒரு அவசர சிகிச்சை மையம், ambulance வசதியோடு பார்க்க முடிகிறது. பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. அடுத்து முக்கியமானது, சாலைகளின் சீரான நிலை. (தேர்தல் வருவதால் கூட இருக்கலாம்.) 80 - 100 கி.மீ வேகத்தை எளிதாக தொட முடிந்தது. 120 ஐ தொட பார்த்த டிரைவரை அடக்கி வாசிக்க சொல்ல வேண்டி இருந்தது. வரவேற்க தக்க மாற்றம். தமிழகம் முழுதும் நிலை இப்படியா தெரியவில்லை.

தமிழக பொறியியல் கல்லூரிகள் - 3

இதை படிங்க முதல்ல. சிரிப்பு சிரிப்பா வரலை ? பாதி கல்லூரிகளில் பாடம் நடத்த நல்ல ஆள் இல்லை, இருக்கறவங்கள்ள பாதிக்கு பாடம் வேற தெரியாது, இதுல பசங்க என்ன போட்டுட்டு வரங்கன்னு பார்த்து, அது சரியா இல்லைனா fine போட்டு, வகுப்பை விட்டு வெளியே அனுப்பி, பாடத்தை தவிற எல்லாம் நடக்கும் போல இருக்கு. Moral Science பாடம் வைக்காமல் இருந்தால் சரி. Moral guardian வேலை கல்லூரிகளுக்கு எதற்கு என்று தெரியவில்லை. அப்பா, அம்மா பார்த்து கொள்ள மாட்டார்களா ? 18 வயதில் (விவரம் தெரிந்த) அப்பா அம்மாக்கள் எல்லோருமே பிள்ளைகளுக்கு விவரம் தெரியும் என்று விடும் போது நம் கல்லூரிகளுக்கு திடீர் என்று அக்கறை. நான் பார்த்த வரை இதனை Selling point ஆக உபயோகிக்கிறார்கள். அதற்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. இதை செய்ய 500 பக்க புத்தகத்தை படிக்க வேண்டாம். எனவே அமல் படுத்துவதும் சுலபம். எனவே செய்கிறார்கள்.

Shorts, T-shirt, jeans இவை எல்லாம் போட்டால் என்ன ? படிப்பு மண்டையில் ஏறாதா ? நான் படித்த போது வேஷ்டி கட்டி வருவது சகஜம். என்ன கெட்டுப் போய்விட்டோம் என்று தெரியவில்லை.

அப்படியே இதையும் படித்துவிடுங்கள். நான் இங்கே சொன்னதை மார்தட்டி பெருமையாய் சொல்கிறார்கள். கம்பனிக்கள் கேட்பதை சொல்லிக் கொடுக்கிறோம் என்று. Computer science, Computer engineering எல்லாம் தேவை இல்லை இவர்களுக்கு. science/engineering எல்லாம் சும்மா, programming போதும். தேவுடா ! தேவுடா !

2005/07/28

நான்கு மாதங்கள் கழித்து .....

வலை பதிவதை விட்டு 4 மாதங்கள் ஆகிவிட்டது. படிப்பில் வந்த திடீர் கவனம் என்றெல்லாம் கதை விட முடியாது. பதிய விஷயங்கள் பல இருந்தும் ஏனோ இணையத்தை விட்டே கொஞ்சம் விலகி இருந்து விட்டேன். இரண்டு மாத இந்திய பயணம் வர இருந்ததால், அதற்காக முடிக்க வேண்டிய வேலைகள், செமஸ்டர் இறுதி தேர்வுகள் என்று முதல் இரண்டு மாதம் ஓடியது. அடுத்த 2 மாதத்தில் அம்மா சாப்பாடு, அப்பாவோடு எப்பொழுதும் போல் நீண்ட உரையாடல்கள், இந்தியாவில் ஊர் சுற்றல், வீட்டில் முதல் திருமணம் என்பதால் எல்லோரும் வந்து இருந்து பார்த்து பார்த்து செய்து வைத்த திருமணம், அதனால் கிடைத்த அன்பு மனைவி, எல்லாம் நினைத்து, பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கும் போது ஜுலை 10 ஆகிவிட்டது. ஆசையாய் கட்டிக் கொடுத்த ரசப்பொடியை மறுக்க மனமில்லாமல் எடுத்து வைத்து, எல்லோருக்கும் கையசைத்து, ஒரு வாரம் பாரிஸ் என்று படு வேகமாய் போய்விட்டது. வந்து உட்கார்ந்து பார்த்தால் மறுபடி வேலை குவிந்து கிடக்கிறது. கிடப்பது கிடக்கட்டும் என்று மீண்டும் வலை பதிய ஆரம்பிக்கிறேன். எத்தனை நாள் தொடர முடிகிறது பார்க்கலாம்.

Paris ல் பிரமிக்க வைத்த இடங்கள் Louvre Museum, Musee d' Orsay, Eiffel Tower ல் july 14 நடந்த வாணவேடிக்கைகள். ஒவ்வொன்றைப் பற்றியும் தனியாக எழுதும் அளவுக்கு விஷயம் உள்ள இடங்கள். காண வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்.